மயானத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடலை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதி பெற்ற தெல்லிப்பழை பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
மயானத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடலை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதி பெற்ற தெல்லிப்பழை பொலிஸாா்..

தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு அருகில் உள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மயானத்தின் காவலாளி கிராம சேவையாளருக்கு அறிவித்தார். 

அதனை அடுத்து கிராம சேவையாளர் அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிசாருக்கு அறிவித்தார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கு இடமான இடத்தினை ஆராய்ந்த சடலம் ஒன்று புதைக்கபட்டு இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதனை அடுத்து, அப்பகுதியினை அகழ்வதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் அனுமதி கோரினார்கள். 

அதற்கு அனுமதி அளித்த நீதிவான் முன்னிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தேகத்திற்கு இடமான பகுதி அகழப்பட்டது. அதன் போது அங்கு மாடோன்றின் சடலம் மீட்கப்பட்டது. 

அதனை அடுத்து சடலமாக மீட்கப்பட்ட மாட்டின் காதில் உள்ள இலக்க தகட்டில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து உரிமையாளரை கண்டறியுமாறு நீதிவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு