தாயின் தங்க நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த இளம் பெண் கைது..

ஆசிரியர் - Editor I
தாயின் தங்க நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த இளம் பெண் கைது..

வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனைவியின் நகைகள் வீட்டில் இருந்து களவாடப்பட்டு உள்ளது. பகல் வேளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அதனை திருடி சென்று இருக்கலாம் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை முறைப்பாட்டாளரான வீட்டின் உரிமையாளருக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவர் உங்கள் நகைகள் அனைத்தும் வீட்டு வளவினுள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். 

குறித்த இளைஞன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்த போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் அவ்விடத்தில் கிடந்துள்ளன. அவை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு முறைப்பாட்டாளர் அறிவித்தார். 

அதை அடுத்து குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் தொலைபேசி இலக்கத்திற்கு உரிய இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது குறித்த இளைஞன் முறைப்பாட்டாளரின் மகள் தனது காதலி எனவும் , அவரே தனது தாயாரின் நகைகளை திருடி தன்னிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து முறைப்பட்டாளரின் மகளை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு