யாழ்.புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகா் இடமாற்றம்.. அரசியல் பழிவாங்கல் எனகூறி மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகா் இடமாற்றம்.. அரசியல் பழிவாங்கல் எனகூறி மக்கள் போராட்டம்..

புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஜே/208 கிராம சேவகர் அரசியல் பழிவாங்குதலுக்காக திடீரென இடமாற்றம் செய்யப்படடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை போராடடத்தில் ஈடுப்பட்ட்னர்.

புன்னாலைக் கட்டுவன் வடக்கு மீள் குடியேற்ற பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் மக்களுக்கான தேவைகளை அறிந்து மிக நேர்த்தியாக கடமை செய்துகொண்டிருந்த கிராம சேவகரை அரசியல் உள்நோக்கத்துக்காக இடமாற்றம் செய்துள்ளனர்.

எனவே குறுகிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படட இடமாற்றத்தை இரத்த்துச் செய்து எமக்கு அதே கிராம சேவகரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு