ஜனநாயகத்தை பாதுகாக்க கோாி ஐ.தே.கட்சியின் ஒழுங்கமைப்பில் கையெழுத்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனநாயகத்தை பாதுகாக்க கோாி ஐ.தே.கட்சியின் ஒழுங்கமைப்பில் கையெழுத்து போராட்டம்..

ஐனநாயகத்தைப் பாதுகாப்போம், தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்றகோரிக்கையின் அடிப்படையில் கையெழுத்து வேட்டையும் கவனயீர்ப்புபோராட்டமும் யாழில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின்முன்பாக இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது .

இதன் போது ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மக்கள் தீர்ப்பாயம் எனப்குறிப்பிடப்பட்டு பொது மக்களிடம் கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து  ஐனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்திகவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இதன் போது நம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் சிறிசேன, 

மனச்சாட்சியின்அடிப்படையில் ஐனநாயகத்தைப் பாதுகாப்போம்,ஐனாதிபதி சிறிசேன இது எங்கள்நாடு என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத்தாங்கியவாறு அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பொது  மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு