அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம்!

ஆசிரியர் - Admin
அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம்!

அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் குறித்த வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால் அவ்வீதியூடாக பயணம் செய்பவர்கள் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வீதியால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி ஒருவர் வெள்ளத்திற்குள் மறைந்திருந்த குழியில் மாட்டி விபத்துக்குள்ளாகியிருந்தார். மேலும் வழி இலக்கம் 751,766,767 ஆகிய பயணிகள் பஸ்களும் ஆபத்தான நிலையில் அவ் வீதியூடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றன.

தொண்டைமானாறு துருசு புனரமைப்பின் போது அமைக்கப்பட்ட மண் மேடு உரிய முறையில் அகற்றப்படாதமையினாலேயே அங்கு தேங்குகின்ற நீர் வழிந்தோடமுடியாத நிலை காணப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு