வடக்கிலுள்ள மருத்துவர்களுக்கு அதிக விடுமுறை எடுக்கும் நோய்! - சுகாதார அமைச்சர் காட்டம்

ஆசிரியர் - Editor I
வடக்கிலுள்ள மருத்துவர்களுக்கு அதிக விடுமுறை எடுக்கும் நோய்! - சுகாதார அமைச்சர் காட்டம்

வடக்கு மாகா­ணத்­தி­லே­யே மருத்­து­வர்­கள் அதிக விடு­முறை எடுத்­துக்­கொள்­கின்­ற­னர். இது ஒரு நோய். இந்த நோய் குணப்­ப­டுத்த முடியா­த­ள­வுக்கு பர­வி­விட்­டது என தெரி­வித்த வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் குண­சீ­லன் வரு­டக்­க­ணக்­கில் இந்த நோயை இழுத்­த­டிக்­காது விரைந்து குண­மாக்க முயற்சிக்­கின்­றேன் என்­றும் தெரி­வித்­தார். 

முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் சுகா­தா­ரத் துறை தொடர்­பாக அதிக முறைப்­பா­டு­கள் முன்­வைக்­கப் பட்­டன. அதில் எங்கு­மில்­லா­த­வாறு வடக்கு மாகா­ணத்­தில் தான் மருத்­து­வர்­க­ளின் விடு­மு­றைக் காலம் அதி­க­மாக உள்­ளது. முன்­னைய காலங்­க­ளில் ஒன்­று­விட்ட வாரத்­தின் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­ க­ளி­லேயே விடு­முறை வழங்­கப்­பட்­டது.

தற்­போது மருத்­து­வர்­கள் இரு வாரங்­கள் சேவை­யில் இருந்­தால் இரு வாரங்­கள் விடு­மு­றை­யில் சென்று விடு­கின்­ற­னர். இது வடக்கு மாகா­ணத்­தி­லேயேதான் காணப்­ப­டு­கின்­றது இத­னால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது எமது மக்­களே. இது தொடர்­பாக உங்­க­ளால் (அமைச்­சர் குண­சீ­லன்) நட­வ­டிக்கை எது­வும் எடுக்­கப்­பட்­டுள்­ளதா என ஒருங்­கி­ணைப்பு இணைத்­த­லை­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் வட­மா­காண சுகா­தார அமைச்­ச­ரி­டம் கேட்­டார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்­சர்; ”இணைத்­த­லை­வர் கூறிய விடயம் உண்­மை­யா­னது. எங்­க­ளு­டைய பாணி­யில் தெரி­விப்­ப­தா­னால் இது ஒரு நோய். இந்த நோயை ஆரம்­பத்­தில் இருந்தே வைத்­துக்­கொண்டு இருக்­கின்­றார்­கள். அது குணமாக்க முடி­யாத நிலைக்கு வர­முன்பே நாங்­கள் விழிப்­பு­ணர்வு அடைந்­தி­ருக்­கின்­றோம். நீங்­கள் கூறு­வ­தற்கு முதலே இது தொடர்­பில் கடு­மை­யான முயற்­சி­களை எடுக்க உள்ளேன் என என்­னு­டைய அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரியப்­ப­டுத்­தி­யுள்­ளேன். உட­ன­டி­யாக பழைய நிலைக்கு மாற்ற வேண்­டும் என்­பது உண்மை. அதற்­கா­க வரு­டக்­க­ணக்­கில் இந்த நோயை இழுக்க விருப்­ப­மில்லை. ஆகவே இந்த நோயை குணப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்கொள்­ளப்­ப­டும்” என்­றார்.

இந்த நோயை ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கும் பர­வா­மல் எமது மாகா­ணத்­தில் இருந்து அகற்­றும் பொறுப்பை குண­சீ­ல­னி­டம் ஒப்­ப­டைக்­கின்­றேன் என இணைத்­த­லை­வர் சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு