யாழ்.மாநகரசபைக்கு விஜயம் மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவா்கள் குழ..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கு விஜயம் மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவா்கள் குழ..

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று ஆராய்வு திட்டம் ஒன்றின் நிமிர்த்தம் யாழ் மாநகரசபைக்கு நேற்று (06) விஜயம் செய்திருந்தனர். 

யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் (வீட்டுக்கழிவு, திண்மக்கழிவு) ஆராய்ச்சி செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் வருகை தந்ததாகவும் அக் குழு குறிப்பிட்டது.

குறிப்பிட்ட மாணவர் குழாமினை மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் சந்தித்து மாநகரின் கடந்தகால மற்றும் தற்போதைய கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், அதில் மாநகரசபை மற்றும் மாநகர மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள். என்பவற்றுடன், எதிர்காலத்தில் இக் கழிவகற்றல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பொறிமுறை தொடர்பிலும் விளக்கினார்.

மேலும் தற்போதைய மாநககரின் பொதுவான செயற்பாடுகள், நடைமுறைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார். 

குறித்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு