பொது பயன்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கிய பேருந்தில் வந்து மஹிந்தவுக்கு ஆதரவாக போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பொது பயன்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கிய பேருந்தில் வந்து மஹிந்தவுக்கு ஆதரவாக போராட்டம்..

வதிரி பரமானந்தா இந்து ஆச்சிரமத்திற்கு இந்து கலாச்சார அமைச்சினால் ஆச்சிரமத்தினதும் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட பேரூந்தில் ஏற்றிவரப்பட்டோர் யாழ். நகரின் மத்தியில் மகிந்தவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் எரிபொருள் நிலையத்தின் முன்பாக இருந்து ஆரம்பித்து கஸ்தூரியார் வீதி வழியாக நகரின் மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் பங்குகொண்டிருந்தனர். குறித்த நூறுபேரையும் இரு பேரூந்துகள் ஏற்றிவந்த நிலையில் ஓர் பேரூந்து இந்து கலாச்சார அமைச்சின் அன்பளிப்பு பேரூந்தாக காணப்பட்டது.

அப்பேரூந்தில் வருகை தந்தோர் மகிந்தவின் புகைப்படத்தை ஏந்தியவாறு வருகை தந்தனர். இவ்வாகனம் வடமராட்சிப் பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சுற்றுலாக்கும் மற்றும் பொதுவான இந்து சமயாச்சாரியங்களுக்கும் உபயோக்கிக்கப்படல் வேண்டும். 

ன பேரூந்தில் பொறிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் , வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் , யாழ். மாவட்ட பெரமுன கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு