யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் புனரமைக்கப்பட்ட குளம் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் புனரமைக்கப்பட்ட குளம் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது..

யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘வளவில்குளம்’ குளமானது நீண்டகாலமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக வட்டுக்கோட்டை தெற்கு, விவசாய அமைப்பு மற்றும் யாழ்.நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரம் மோகன், 

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்ஷன கெட்டியாராச்சியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவ வீரர்களின் மற்றும் இராணுவ இயந்திரங்களின் உதவியுடனும் அப்பிரதேச மக்களினுடைய நலன் கருதி குறித்த குளத்தின்

அளவுப் பிரமாணத்தினை விசாலப்படுத்தி பாவனைக்குகந்த வகையில் புனரமைப்பு செய்யப்பட்டது. இவ்வாறு புனரமைப்பு செய்யப்பட்ட குளமானது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது 2018.12.02 அன்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றது. 

இச் சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி, இந்தியதுணைத்தூதுவர் எஸ் பாலச்சந்திரன், இராணுவ உயரதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு