யாழ்.பருத்துறை பகுதியில் மாவீரா் தின ஒழுங்குகளை குழப்பி மக்களை அச்சுறுத்திய பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை பகுதியில் மாவீரா் தின ஒழுங்குகளை குழப்பி மக்களை அச்சுறுத்திய பொலிஸாா்..

பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப் பகுதி மக்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

குறித்த இச் சம்பவமானது இன்று மாலை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் குறித்த பகுதியில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அப் பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் இவ்வாறு செய்துள்ளனர்

அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்தும், வைக்கப்பட்டிருந்த மாவீரர்களது சிவில் உடையிலான  புகைப்படங்களை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார் அப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சுழல் காணப்படுவதுடன் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு