கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிவ தீட்சை வழங்கும் நிகழ்வு..

ஆசிரியர் - Editor I
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிவ தீட்சை வழங்கும் நிகழ்வு..

கோப்பாய் ஆசிரிய கலாசாலை இந்து மன்றம் முன்னெடுத்த சிவ தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று (24.11.2018) சனிக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலையில் உள்ள யோகலிங்கேசுவரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இருபாலை கற்பகவிநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ பா.செல்வசேனக் குருக்கள் தீட்சா குருவாகப் பங்கேற்றார். நல்லூர் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சிவ. கமல்ராஜ் குருக்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

கலாசாலையின் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் சிவதீட்சையைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் மலையகப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்பது பெருமைப்படத்தக்கது.

தீட்சை பெற்ற அனைவருக்கும் சிவதீட்சை பற்றிய கைந்நூல் இருபாலை கற்பக விநாயகர் தேவஸ்தானத்தாரால் வழங்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு