தொலைக்காட்சி பார்ப்பதை அண்ணன் கண்டித்ததால் தற்கொலை செய்த மாணவி..
அராலி தெற்கு வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை வெளிநாட்டில் உள்ள சகோதரன் கண்டித்ததாலேயே குறித்த மணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணிக்கவாசகம் சாரு (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவி ஆனவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் அவர் கல்வி கற்று வருபவர் ஆவார்.
யாழ் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை நடத்தி சடலத்தை ஒப்படைத்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.