கிளிநொச்சி- முகமாலையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு..
யாழ்.முகமாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்ற கடுகதி புகயிரத்தத்துடன் இன்று சனிகிழமை மதியம் ஏற்பட்ட விபத்தின் போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
புகையிரதம் வரும் வேளை பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாகவும் ,
சடலம் அடையாளம் காணப்பட வில்லை எனவும் கொடிகாம போலீசார் தெரிவித்துள்ளனர்.