பேஸ்புக் நண்பனை சந்திக்க சென்றவர் தனது தொலைபேசியை பறிகொடுத்தார்..
பேஸ்புக் நண்பனை சந்திக்க சென்ற இளைஞர் ஒருவர் கைத்தொலைபேசியை அவரிடமே பறிகொடுத்த சம்பவம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேஸ்புக்கில் நண்பனாக இருந்துள்ளார்.
இந்நிலையில் காரைநகரைச்சேர்ந்த இளைஞர் வடமராட்சி இளைஞரான நண்பனைச் சந்திப்பதற்காக வியாழக்கிழமை வடமராட்சிக்கு சென்றுள்ளார்.
அவரை முள்ளிப்பகுதிக்கு வருமாறு கூறியபோது அங்கு சென்ற காரைநகரைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்த தொலைபேசியை பார்ப்பது போல
பாசாங்கு செய்துவிட்டு தொலைபேசியுடன் வடமராட்சி இளைஞர் தலைதெறிக்க ஓடித்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.