போதை எதிர்ப்புக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் போராட்டம்..
கோண்டாவில் பரஞ்சோதி பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பாடசாலை மாணவர்களும் இணைந்து இந்த நடைபவனியை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த நடைபவனியில் கோண்டாவில் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் த.சுரேஷ்குமார் நெறிப்படுத்தலுடன் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய நடைபவனி கோண்டாவில்
வீரபத்திரர் ஆலய வீதி ஊடாக சென்று வாகீஸ்வரி வீதி,தில்லையம்பதி ஆலய வீதி வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இந்த நடைபவனியில் கலந்து கொண்ட மாணவர்கள் "நீ குடிக்கும் மது உன்னைக் கொல்லும்",குடி குடியை கெடுக்கும்",புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்","பஞ்சமா பாதங்களில்
முதன்மையானது போதை",போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.