கிணற்றுக்குள் இறங்கியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
வடமராட்சியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த விவசாயியான இரத்தினம் ரவீந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த விவசாயியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் நீரிறைக்கும் மின் மோட்டார் பழுந்தடைந்தமையால் அதனை திருத்த முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்தில்
விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் சடலத்தை மீட்டு மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைந்தனர்.