குளத்தில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு..
வடமராட்சி அல்வாய் பகுதியில் குளத்தில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
அல்வாய் கிழக்கை சேர்ந்த தம்பிராசா சந்திரகுமார் (வயது 47) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த வேளை குளத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் மாலை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து
கடற்படையின் சுழியோடும் பிரிவினர் குளத்தில் தேடுதல் நடத்தில் சடலத்தை மீட்டு கரை சேர்ந்தனர்.