யாழ்.வடமராட்சியில் 6 பேர் கைது, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாம்..
வடமராட்சி பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லியடி கரணவாய் பகுதியில் அண்மையில் வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தோரை மிரட்டி பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறை பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்த குற்ற சாட்டில் ஒருவரையும் ,
அச்சுவேலி பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 17 பவுண் தாலிக்கொடியை அறுத்த குற்றசாட்டில் ஒருவரையும் என ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.