நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு..
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர் மனுதார்ர்களில் ஒருவரான சட்ட மா அதிபர், தனது சமர்ப்பணத்துக்கு மேலதிக நேரம் வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்விடம் கோரினர். அதனை ஏற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு நாளை வரை விசாரணையை ஒத்திவைத்தது.