வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கணவனின் சடலமும், நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் மனைவியின் சடலமும் மீட்பு!

ஆசிரியர் - Editor I
வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கணவனின் சடலமும், நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் மனைவியின் சடலமும் மீட்பு!

வவுனியா - நெடுங்கேணி, கிரிசுட்டான் பகுதி வீடோன்றில நேற்று (02) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு