நாடாளுமன்றத் தேர்தல்: களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டணி!
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணி பொதுத்தேர்தல் குறித்து நாளை கூடி ஆராயப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவரான வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற தமது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டிருந்தார்.
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழலிலேயே நாளைய தினம் கூடி ஆராயவுள்ளதாக சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.