யாழில் நாளையும், நாளை மறுதினமும் மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்

ஆசிரியர் - Admin
யாழில் நாளையும், நாளை மறுதினமும் மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமையும் (12) நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் (13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை திங்கட்கிழமை(12) காலை-08. 30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். நாவற்குழி Sanken Construction பகுதியிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(13) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் குளப்பிட்டியிலிருந்து ஆனைக்கோட்டை வரை, மூத்த விநாயகர் கோயில் பிரதேசம், சென்பீற்றர்ஸ் தேவாலயம், நவாலி வேலக்கைப் பிள்ளையார் கோயிலடி, அட்டகிரி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு