சொகுசு காாில் கஞ்சா கடத்தியவா்கள் ஓமந்தை பொலிஸாரால் கைது..

ஆசிரியர் - Editor I
சொகுசு காாில் கஞ்சா கடத்தியவா்கள் ஓமந்தை பொலிஸாரால் கைது..

வவுனியா ஓமந்தை பகுதியில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பொன்சேகா அவர்களின் நெறிப்படுத்தலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ்த டி சில்வா தலைமையில் ஏ9 வீதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் ஒரு கிலோ 126கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்துச்சென்ற சம்மாந்துறை பகுதியினை சேர்ந்த 24, 28, 29 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு