கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். 

குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இருந்து யாழில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு சகோதரியிடம் தான் கொழும்பு செல்வதாக கூறி இரவு 7 மணியளவில் சகோதரியின் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். 

அதன் பின்னர் மறுநாள் 1ஆம் திகதி தாயார் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்த முயன்ற போது அவரது தொலைபேசி செயலிழந்து உள்ளது. அதன் பின்னர் இளைஞனுடன் எவ்வித தொடர்புகளும் கிடைக்க வில்லை. 

இந்நிலையில் நேற்றைய தினம் 3ஆம் திகதி மல்லாவி போலிஸ் நிலையத்தில் இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு