ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் பலி..
வவுனியா- தாண்டிக்குளம் சாந்தசோலை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த
ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழு ந்துள்ளான். ஓமந்தை- சாந்தசோலை கிரா மத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் வி ளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும், தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.
ஆனாலும் உண்மையை உறுதிப்படுத்த மு டியவில்லை.