மோசமான சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 7 உணவகங்களுக்கு தண்டம்,சீல்..

ஆசிரியர் - Editor I
மோசமான சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 7 உணவகங்களுக்கு தண்டம்,சீல்..

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு உள்ளதுடன் , ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

யாழ்.மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால் சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து அதற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதனை அடுத்து நடைபெற்ற விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர் அதனை அடுத்து ஏழு உணவக உரிமையாளர்களுக்கும் தலா ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிவான் , 

உணவகங்களின் சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் சுகாதார பரிசோதகர்களின் அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அது வரை உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு