தீவகப் பகுதிகளில் படை எடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்.
காலநிலை மாற்றத்தினால் வெளிநாட்டுப் பறவை இனங்கள் தீவகப் பகுதியில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இப்பறவை இனங்கள் அதிகமாக வருகை தருகின்றன.
இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.