வெடுக்குநாறி மலையில் குழாய் கிணறு அமைக்க பொலிஸார் தடை..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலையில் குழாய் கிணறு அமைக்க பொலிஸார் தடை..

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கு நேற்றைய தினம் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

நேற்றைய தினம் நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊடாக கிணறு அமைக்க வந்தவர்களிடம் யாரைக்கேட்டு இங்கு வந்தீர்கள்,இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம் மீறி செயற்பட்டால் அனைவரையும் கைது செய்வோம் என எச்சரித்துளளதோடு கிணறும் அமைக்க முடியாது என்று தடையும் விதித்துள்ளனர்

இவர்களின் இவ்வாரான செயற்பாடுகளின் மூலம் கிணறுக்காக  நிதி திரும்பிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு