துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு..

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

அனுராதபுரத்தை சேர்ந்த அபயரத்னா (வயது 19) என்பவரின் சடலமே கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய வாசலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது. 

அது தொடர்பில் காங்கேசன்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்து உள்ளனர், 

தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு