யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ரவுடி கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ரவுடி கைது..

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மானிப்பாய் போலீசார் கைது செய்தனர். 

குறித்த இளைஞனை கைது செய்யும் போது அவரிடமிருந்து இரண்டு வாள்களை தாம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் , மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்பு இருப்பதாக 

கண்டறிந்ததை அடுத்தே இளைஞனை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு