கத்தி முனையில் 11பவுண் நகை கொள்ளை, திருநெல்வேலியில் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
கத்தி முனையில் 11பவுண் நகை கொள்ளை, திருநெல்வேலியில் துணிகரம்..

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை ஒரு மணியளவில் முகத்தினை கறுப்பு துணியால்  மூடி கட்டியவாறு உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த கொள்ளையில் ஈடுபட்டனர்.

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வித்துவானின் கண்ணுக்கு அருகில் கிறீஸ் கத்தியை வைத்து மிரட்டி வித்துவானின் கழுத்தில் இருந்த 11பவுண் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு