நாரந்தனை பாடசாலையில் திருட்டு, பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
நாரந்தனை பாடசாலையில் திருட்டு, பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது..

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதயினை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 8ம் திகதி பாடசாலையின் அலுவலகத்தின் கூரை பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் அங்கிருந்து  82ஆயிரத்து 610 ரூபா பெறுமதியான பொருட்களை திருடி சென்றிருந்தனர். அதில் கணிணி தொகுதி, அதனுடன் இணைந்த றேடியோ, மைக், அம், யூபிஸ்., கெற்போன், எலக்றிக்கேற்றில், 

ஸ்ரெப்ளர்மிசன், ஆய்வுகூட உபகரணங்கள் உட்பட களஞ்சிய அறையில் இருந்த 53 ரின் மீன்கள் என்பவவை திருடப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் ஊhகாவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

விசாரணைகளை முன்னெடுத்திருந்த பிரதம பொலிஸ்பரிசோதகர் தலைமையிலான பொலிஸார், சந்தேக நபர்களை இணங்கண்டு கைது செய்திருந்தனர். இதில் இருவர் இன்றையதினம்(12) கைது செய்யப்பட்ட நிலையில் தம்பாட்டி பகுதியினை சேர்ந்த மேலும் ஒரு நபருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்களை ஊர்காவற்துறை நீதிவான் நிதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு