இளம் பெண் கடத்தலா? முச்சக்கர வண்டி சாரதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I
இளம் பெண் கடத்தலா? முச்சக்கர வண்டி சாரதி விளக்கம்..

யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் , குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். 

யாழ். செம்மணி பகுதியில் வைத்து யுவதி ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

அதன் பிரகாரம் யுவதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின்  பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த போது ,

 குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறிந்து , குறித்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

அதன் போது குறித்த இளைஞன் , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அதனால் செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து சென்றதாகவும் , 

அதன் போது வருத்தம் குணமடையாது அவரது அட்டகாசம் கூடியதனால் , அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

பொலிசார் குறித்த இளைஞனனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு