யாழ். ஊரெழுவில் பெண் ஒருவர் அடித்துக் கொலை - மூன்று சந்தேக நபர்கள் கைது!
யாழ்ப்பாணம்- ஊரெழுவில் நேற்று இரவு பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு மேற்கில் நேற்றிரவு 8 மணியளவில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை, இனந்தெரியாத கும்பல் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரின் சிறப்பு அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.