யாழ். உரும்பிராயில் வீடுகள் மீது சரமாரி பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

ஆசிரியர் - Admin
யாழ். உரும்பிராயில் வீடுகள் மீது சரமாரி பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ். உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரு வீடுகள் மீது நேற்றிரவு (28) இனம் தெரியாத குழு சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ். உரும்பிராய் கிழக்கு சென் மைக்கல் சேர்ச் பின் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத குழுவினரால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள வீடுகள் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரு வீடுகளினதும் முன்பக்கம் கடும் சேதங்களுக்குளாகியுள்ளது.

எனினும், வீட்டிலிருந்தவர்களுக்குத் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச் சம்பவங்களால் மேற்படி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு