தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு..

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி யாழ். பொலிசாரினால் , யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வுள்ளது. 

குறித்த வழக்கில் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கூடாது எனவும் நினைவு கூறும் உரிமை உண்டென கோரி , ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக உள்ளனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்டட வுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில் பலர் கூடியுள்ளனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு