சர்ச்சைக்குரிய மாடு நாளை வெட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
சர்ச்சைக்குரிய மாடு நாளை வெட்டப்படுகிறது..

யாழ். ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் இறைச்சிக்காக வெட்டுப்பட குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது

இந்நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த மாடு வெட்டப்படவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். தவிர்க்கமுடியாத காரணத்தினால் முன்னர் தடை செய்யப்பட்டது. 

எனினும் 23 ஆம் திகதி சட்டபூர்வமான முறையில் கொல்களத்தில் வெட்டப்படும். நாங்கள் இந்த மாட்டை தர்மதானம் செய்வதற்கும் கோரினோம் ஒருவரும் தொடர்புகொள்ளவில்லை. எமது தொழிலுக்காக வெட்டவுள்ளோம். 

முதல் 6 இலட்சத்துக்கு விற்பதாக இருந்தோம் பின்னர் 5அரை இலட்சம் என்றாலும் கொடுப்போம் என்றார். சனிக்கிழமை முதல் யார் கேட்டாலும் கொடுக்க தயார். இராணுவத்தினர் முன்னர் கேட்டனர். பிறகு தொடர்ப்புகொள்ளவில்லை என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு