யாழில். மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர் - ஐந்து மாணவர்கள் காயம்

யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ,ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள் , பாடசாலை நேரம் , வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் , வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ள்ளார்.
அதனால் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற அதிபர், ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.