மெத்தைக்குள் கஞ்சா கடத்தல் - கிளிநொச்சியில் நால்வர் மாட்டினர்!

ஆசிரியர் - Admin
மெத்தைக்குள் கஞ்சா கடத்தல் - கிளிநொச்சியில் நால்வர் மாட்டினர்!

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், இன்று சூட்சுமமான முறையில் கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை, கிளிநொச்சி பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அம்பாள்குளம் பகுதியில், வாகனமொன்றை வழிமறைத்து சோதனை மேற்கொண்ட போது, அந்த வாகனத்தில் இருந்த மெத்தைக்குள் சூட்சுமமான முறையில் 2 கிலோ கேரளா கஞ்சா மறைத்து கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாகத் தரித்து நின்ற ஓட்டோவை சோதனை செய்த பொலிஸார், அதிலிருந்தும் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன்போது, இருவர் கைது செய்யப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு