யாழ், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(13) காலை முதல் மாலை வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் ஊர்காவற்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, நாரந்தனை, கரம்பன், மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுமாதா ஆலயப் பிரதேசம், மடுமாதா ஆலயம் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம் கிராமம், புளிதறித்த புளியங்குளம், புளிதறித்த புளியங்குளம் வீட்டுத் திட்டம், செக்கட்டிப்புலவு வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு