குரும்பசிட்டியின் மீள் எழுச்சியின் தந்தை அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் பணியை தொடர்ந்த சமூகநேயர் திரு. பொ. தங்கராஜா.

ஆசிரியர் - Admin
குரும்பசிட்டியின் மீள் எழுச்சியின் தந்தை அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் பணியை தொடர்ந்த சமூகநேயர் திரு. பொ. தங்கராஜா.

குரும்பசிட்டியின் மீள் எழுச்சியின் தந்தை  எனப்போற்றப்படும்  எனது தந்தை அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் பணியைத் தொடர்ந்து  குரும்பசிட்டி  கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சமூகநேயர் திரு. பொ. தங்கராஜா அவர்கள்  ஜனாதிபதி  அவர்களுக்கும் ,யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி அவர்களுக்கும் குரும்பசிட்டியின் விடுவிக்கப்படாத முக்கிய சில பகுதிகளை விடுவிக்கும்படி விடுத்த கோரிக்கையின் பிரகாரம். 

இன்று குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்க கட்டத்திற்குரிய (ஜே/242) பத்திரத்திரம் சங்க தலைவர் பொன்னுத்துரை தங்கராஜாவிடம் கையளிக்கப்பட்டது, குரும்பசிட்டி சனசமூக நிலையம் (ஜே/243) தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் நடராசா உமாகரனிடம் வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இதனுடன் 12 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.

மயிலிட்டியில் அரச அதிபர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில்  கோரிகைவிடப்பட்ட பகுதிகளை விடுவித்தமைக்கான பத்திரத்தை திரு.பொ.தங்கராஜா  அவர்களிடம்  கையளித்துள்ளனர்  என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே வகையில்  மீதி இடங்களும் விடுவிப்பதற்கானமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் குரும்பசிட்டி  மீண்டும்  குட்டிச்சிங்கப்பூராக எழுச்சி  பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

FD NEWS: Valanteena Deen


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு