முதல்தடவையாக நாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்டத்தில் கூடுகிறது..

ஆசிரியர் - Editor I
முதல்தடவையாக நாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்டத்தில் கூடுகிறது..

வரவு செலவு திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்தறிவதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு நாளை மறுதினம் திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடவுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், நிதிக்குழு தலைவருமான எம்.ஏ.சு மந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றில் நிதிக்குழு, பொதுக்கணக்குகள் குழு, கோப் குழு என 3 குழுக்கள் உள்ளது. 

இதில் நிதிக்குழு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த குழு வரவு செலவு திட்டத்  திற்கு முன்னரும் பின்னருமான நிதி முன்மொழிவுகள் அமுலாக்கம் குறித்து அவதானிப் பதற்கான குழுவாகும். 

இந்த குழுவின் தலைவராக நான் இருக்கிறேன். இந்த குழு நாடாளுமன்றத்திற்கு உள்ளே கூட்டங்களை நடாத்தினாலும், வெளியே நடாத்தினாலும் அது பாராளுமன்ற கூட்ட ங்களாக அமையும். 

இதன்படி முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டங்களை நடாத்தவுள்ளது. இதன்படி நாளை கண்டி மாவட்டத்தில் கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் 

இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாத்தறை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் ஒரு திறந்த கூட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு பொது அமைப்புக்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் பொதுமக்களும் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வரவு செலவு திட்டத்தில் இடம்பெறவுள்ள தமது தேவைகள் குறித்த கருத்துகளை கூறலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம். 

மேலும் இந்த கூட்டத்தில் நிதிக்குழு அங்கத்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய 7 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். விசேடமாக வரவு செலவு திட்டத்தை தயா ரிக்கும் திணைக்களம் சார் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு