இணைய வழி நிதி மோசடி..! மேலும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழு பொலிஸாரால் கைது..

ஆசிரியர் - Editor I
இணைய வழி நிதி மோசடி..! மேலும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழு பொலிஸாரால் கைது..

இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு