ஆயிரக்கணக்கான அரச வாகனங்களை காணவில்லை! விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஆயிரக்கணக்கான அரச வாகனங்களை காணவில்லை! விசாரணை ஆரம்பம்..

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவற்றில் அதிகளவான வாகனங்கள் சுகாதார அமைச்சுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இது தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும்,  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.

இந்த விசாரணையின் பின்னர் காணாமல் போன அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு