நீதிமன்றத்தில் இருந்து சான்றுப் பொருட்களை திருடிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்தில் இருந்து சான்றுப் பொருட்களை திருடிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!

கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சான்றுப் பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு