பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! ஒக்டோபர் 4ம் திகதி வேட்புமனு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! ஒக்டோபர் 4ம் திகதி வேட்புமனு தாக்கல்..

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 

 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.

இதனை அடுத்து நவம்பர் 14 ஆம்  திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு