இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அனுர! சுனில் ஹெந்துன்நெத்தி கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அனுர! சுனில் ஹெந்துன்நெத்தி கூறுகிறார்..

இலங்கை தனது இறுதிநிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்,

இந்த நோக்கத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு