தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திாி அரசின் பங்காளி கட்சியே.. நாமல் ராஜபக்ஸ கருத்து..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திாி அரசின் பங்காளி கட்சியே.. நாமல் ராஜபக்ஸ கருத்து..

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது , தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்து உள்ளார். 

ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை. 

தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை. என தெரிவித்தார். 

நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்தவா்கள் அல்ல...

நாங்கள் தீவிரவாதிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இந்த நாட்டின் இளைஞர்கள் யுவதிகள் , மக்களே மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது. 

நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இனைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. 

அதனால் தீவிரவாதிகளை நாம் ஏற்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம்.  என தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளா் தொடா்பாக நேரம் வரும்போது கூறுவோம்..

மகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே அறிவிப்பார் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்சே மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். 

அதன் போது , மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா ? கோத்தாபாய ராஜபக்சவா ? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார். 

இலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு