ஆலய வழிபாட்டுக்கு வந்த பக்கதர்களை அச்சுறுத்திய வாகனம்..

ஆசிரியர் - Editor I
ஆலய வழிபாட்டுக்கு வந்த பக்கதர்களை அச்சுறுத்திய வாகனம்..

யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு வழிபட வந்தவர்களை வடிவாகனத்தில் வந்தவர்கள் விரட்டியடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று(9) மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வடிவாகனத்தில் வந்த 3 பேர் ஆலய சூழலில் கண் மண் தெரியாமல் வேகமாக ஓடித்திரிந்தனர். அப்பொழுது ஆலயத்துக்கு வழிபட வந்த சிறுவன் ஒருவன் மீது வடிவாகனத்தை மோதப் பார்த்த போது சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான்.

இதனைக் கண்ட சிறுவனின் தகப்பன் வடிவாகனத்தில் வந்தவர்களைப் பார்த்து பேசிய போது வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி வந்து சிறுவனின் தகப்பனை மிரட்டியதுடன் இது எங்களுடைய ஏரியா எதுவும் நாங்கள் செய்வோம் எங்களை எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆலயத்துக்கு வழிபட வந்தவர்கள் அரைகுறையாக கடவுளை வழிபட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு