'குமுதினி' படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று நெடுந்தீவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது..

ஆசிரியர் - Editor I
'குமுதினி' படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று நெடுந்தீவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது..

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூவியில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடர்அ ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

அத்தோடு பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த " உப்புக் கடலை உரசிய நினைவுகள்"என்ற கவி நூல் வெளியீடும் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் 

நூல் சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது. குமுதினி படகில் இருந்து கடலில் மலர்தூவி உயிழநதவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

1985/05/15 இதே போன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து யாழ் புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது 

கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை பெண்கள் அடங்கலாக உட்பட 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன்சுவாமிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன் மத தலைவர்கள் படுகொலையில் உயிழந்தவர்களின் உறவுகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு  அஞ்சலி செலுத்தினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு